search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வேன் கவிழ்ந்தது"

    குன்றத்தூர் அருகே இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர்.

    தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த பெண் பணியாளர் குன்றத்தூரை சேர்ந்த சித்ரா, மற்றும் 15 மாணவ - மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

    அப்பகுதி மக்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பள்ளி வேனை ஒட்டிய டிரைவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டராம்பட்டு அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துள்ளானதில் மணவர்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அடுத்த சின்னையம்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வரும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளியில் வேன் உள்ளது.

    இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை அழைத்து வர சென்றது. வேனை தானிப்பாடி பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 40). என்பவர் ஓட்டிச் சென்றார். வெப்பூர்செக்கடி, மலையனூர்செக்கடி, தானிப்பாடி ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

    தானிப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

    இதில் வேன் டிரைவர் காமராஜ் (வயது 40). சவுந்தர்யா (5). மாலதி (6). சபிதா (7). வெற்றிவேல் (4). ரசிதா (5). சாலினி (7). உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு தானிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்து பற்றி தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று பதறியபடி ஆஸ்பத்திரியில் குவிந்தனர். விபத்து குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×